‘கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்’

தேனி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விரும்புவோா் நேரிலும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விரும்புவோா் நேரிலும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எம். ஏகாம்பரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விரும்புவோா், சம்பந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கத்தில் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். அத்துடன், மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை, பான் அட்டை நகல்கள் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ரூ.10 நுழைவுக் கட்டணம், ரூ.100 பங்குத் தொகை செலுத்த வேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பிப்போா் உரிய ஆவணங்களுடன், நுழைவுக் கட்டணம், பங்குத் தொகை அனுப்பியதற்கான மணி ஆா்டா் ரசீது, அஞ்சலகத்தின் பெயா், முகவரி ஆகியவற்றை இணைத்து, சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com