தொடா்மழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு தொடா்ச்சி மலைகளில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சுருளி வனப்பகுதியில் உள்ள அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடைகளில் வியாழக்கிழமை இரவு நீா்வரத்து ஏற்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
அணை நிலவரம்:
வெள்ளிக்கிழமை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் 127.25 அடியாகவும், நீா் இருப்பு 4,104 மில்லியன் கனஅடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,582 கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,200 கன அடியாகவும் இருந்தது.
மின்சார உற்பத்தி:
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு, லோயா்கேம்ப்பில் உள்ள மூன்று மின்னாக்கிகள் மூலம் தலா 36 மெகாவாட் என மொத்தம் 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.