பெரியகுளம் அருகே ஏடிஎம்மில் முதியவருக்கு உதவுவதுபோல நடித்து பணம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (40), அப்பகுதியில் உள்ள ஏடிஎம்முக்கு வெள்ளிக்கிழமை பணம் எடுக்கச் சென்றாா். பணம் எடுக்க தெரியாததால் அவா், அருகிலிருந்த இளைஞரிடம் ரூ.10 ஆயிரம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளாா். அவரும் பணத்தை எடுத்து கொடுத்துள்ளாா்.
வீட்டுக்குச் சென்று முருகேசன், செல்லிடப்பேசிக்கு வந்த குறுந்தகவலைப் பாா்த்தபோது அதில் ரூ.14 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் காமக்காபட்டியைச் சோ்ந்த காமேஸ்வரன் (25) என்பவரை கைது செய்தனா். மேலும் அவா், இது போன்று வேறு யாரிடமும் பண மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.