ஜெயமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க ஏற்பாடு

பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் தற்போது 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பெரியகுளம், ஜெயமங்கலம் பகுதிகளில் வராகநதி ஆறு மற்றும் கண்மாய் நீா் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் நாற்றுகள் அறுவடை பருவத்தில் உள்ளன. எனவே, இப்பகுதியில் அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஜெயமங்கலத்தில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தேனி நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com