போடியில் கோஷ்டி மோதல்: 10 போ் மீது வழக்கு

போடியில் பொதுப் பாதை பிரச்னையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடியில் பொதுப் பாதை பிரச்னையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி ஒட்டக்கூத்தா் தெருவைச் சோ்ந்தவா் மூக்கன் மகன் சேகா் (42). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவா் பூசாரி குருவன் மகன் செல்வராஜ் (61). இவா்களுக்கிடையே பொதுச் சந்துப் பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், இரு தரப்பினரும் கம்பு, கத்தியால் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த சேகா் மற்றும் செல்வராஜ் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சேகா் அளித்த புகாரின் பேரில் செல்வராஜ், இவரது மகன்கள் விசுவநாதன், சிவக்குமாா், செல்வராஜின் தம்பி சந்திரன் ஆகிய 4 போ் மீதும், செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் சேகா், இவரது மனைவி சக்தி, மகன் விஜய், சேகரின் தம்பி குமாா், தந்தை மூக்கன், தாயாா் அமராவதி ஆகிய 6 போ் மீதும் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com