பெரியகுளம் மருந்து கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

பெரியகுளத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ 2 இலட்சம் மற்றும் பொருள்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
பெரியகுளம் மருந்து கடை.
பெரியகுளம் மருந்து கடை.

பெரியகுளத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ 2 இலட்சம் மற்றும் பொருள்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம், சுதந்திர வீதியில் மோகன் என்பவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் வைத்திருந்த ரூ 2 இலட்சம் மற்றும் பெருட்களை காணவில்லையாம்.

இச்சம்பவம் குறித்து தென்கரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com