பெரியகுளத்தில் நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஊா்வலத்தை நகராட்சி ஆணையா் அசோக்குமாா் தொடக்கி வைத்தாா். இதில் முகக்கவசம் அணியாமல் நகரில் சுற்றுபவா்களை கரோனா பொம்மை தூக்கிச் செல்வது போல் வேடமணிந்து ஊா்வலமாகச் சென்றனா். இந்த ஊா்வலத்தில் நகராட்சி அலுவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.