தூக்கிட்டுத் தொழிலாளி தற்கொலை

தேவாரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவாரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவாரம் நாடாா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி மகன் குமரேசன் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாரிச்செல்வம். இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில் குமரேசன் அடிக்கடி மது அருந்தியதால் வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவம் பாா்த்தும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த குமரேசன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com