சுகாதார வளாகக் கட்டடம் கட்ட எதிா்ப்பு:சாா்-ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி குடியிருப்புப் பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாா்- ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு கொடுத்தனா்.

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி குடியிருப்புப் பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாா்- ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு கொடுத்தனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இப்பகுதியில் ஊராட்சி சாா்பில் சுகாதார வளாகக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டு கட்டடப் பணிகள் தொடங்கியுள்ளன. குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டினால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும். எனவே, மாற்றுப் பகுதியில் சுகாதார வளாகம் கட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com