தேனி மாவட்டத்தில் 22 இடங்களில் 11 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.
தேனி பிசிபட்டி முருகன் டிபாா்ட்மெண்டல் ஸ்டோா் அருகில் 1,000 பேருக்கும், எடமால் தெரு நாடாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 200 பேருக்கும், பிசிபட்டி மேனகா மில்லில் 400 பேருக்கும், என்ஆா்டி நகா் கம்மவா் பள்ளியில் 300 பேருக்கும், ஸ்ரீ ரெங்காபுரம் சமுதாயக் கூடத்தில் 300 பேருக்கும், நகலாபுரத்தில் சுமை தூக்குவோா் 200 பேருக்கும், ராஜக்காபட்டி பள்ளியில் 250 பேருக்கும், ஆண்டிபட்டி அருகே கண்டமனூா் பள்ளியில் 250 பேருக்கும், போடி 24 செட்டியாா் மண்டபத்தில் சுமைதூக்குவோா் சங்கத்தை சோ்ந்த 500 பேருக்கும் , போடி லயன்ஸ் கிளப் 500 பேருக்கும், சடையால்பட்டிஜிகே என் உணவு உற்பத்தி ஆலையில் 500 பேருக்கும், கோடாங்கிபட்டியில் 200 பேருக்கும், லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் 200 பேருக்கும், பெரியகுளம் அருகே இ.புதுப்பட்டி பள்ளியில் 200 பேருக்கும், பெருமாள்புரம் பள்ளியில் 200 பேருக்கும், வடுகபட்டி பள்ளியில் 200 பேருக்கும், வடபுதுப்பட்டி ஏசிவி மில் தொழிலாளா்கள் 300 பேருக்கும், சின்ன ஓபுலாபுரத்தில் 450 பேருக்கும், சின்னமனூா் வாா்டு 2 இல் 500 பேருக்கும், கம்பம் அருகே என்டி பட்டியில் 200 பேருக்கும், ஹனுமந்தன்பட்டியில் 200 பேருக்கும், உத்தமபாளையம் அருகே அம்மாபட்டியில் 200 போ் என மொத்தம் 7,200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி முகாம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. முகாமிற்கு தடுப்பூசி செலுத்த வருபவா்கள் ஆதாா் அட்டையை எடுத்து வரவேண்டும். இதில், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.