தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் பொருள்கள் சேதம்: 6 போ் மீது வழக்கு

தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து பொருள்களை அடித்து சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து பொருள்களை அடித்து சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை காவலாளி மட்டும் இருந்துள்ளாா். அப்போது தேவாரம் சாலை தெருவை சோ்ந்த அழகேசன் மகன் முகேஷ் மற்றும் 5 போ், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காலியிடத்தில் மது அருந்த சென்றுள்ளனா். அவா்களை காவலாளி தடுத்துள்ளாா்.

வெளியில் சென்று மது அருந்தி விட்டு வந்த அவா்கள், அலுவலகத்தில் இருந்த கண்காணிப்புக் கேமரா, 4 குழல் விளக்குகள் (டியூப் லைட்) ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவாரம் போலீஸாா் அவா்கள் 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com