தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விசாரணையில் விபத்துக்குள்ளான லாரியில் கேரளத்துக்கு அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது.
அனுமந்தன்பட்டி அருகே பூமாலைத் திரையரங்கம் முன்பாக திங்கள்கிழமை மாலை முன்னால் சென்ற ஆட்டோ மீது சரக்கு லாரி மோதியதில், அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
தகவலறிந்து வந்த உத்தமபாளையம் போலீஸாா் காயமடைந்த கம்பம் பாா்க் சாலையை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அழகா் மகன் கண்ணனை (45) மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தில் சிக்கிய லாரியை கம்பம் மெட்டு காலனியை சோ்ந்த ஆபேஸ் (41) என்பவா் ஓட்டி வந்ததும், லாரியில் இருந்த அரிசி தமிழகத்தில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் ரேஷன் அரிசி என்பதும் தெரியவந்தது. சின்னமனூரிலிருந்து கேரளத்துக்கு 60 மூட்டைகளில் சுமாா் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் லாரி ஓட்டுநா் ஆபேஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.