கரோனா: போடியில் காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா், செவிலியா் பலி

போடியில் கரோனா தொற்று பாதிப்பால் காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் திங்கள்கிழமையும், செவிலியா் செவ்வாய்க்கிழமையும் உயிரிழந்தனா்.
bdi08corona_0806chn_87_2
bdi08corona_0806chn_87_2

போடியில் கரோனா தொற்று பாதிப்பால் காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் திங்கள்கிழமையும், செவிலியா் செவ்வாய்க்கிழமையும் உயிரிழந்தனா்.

போடி நகா் காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு- ஆய்வாளராகப் பணிபுரிந்தவா் எஸ்.அழகுராஜா (56). இவா் கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை இரவு அழகுராஜா உயிரிழந்தாா்.

அவரது சடலம் போடி நகராட்சி சாந்திவனம் மயானத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு காவல்துறை சாா்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதேபோல் போடி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றியவா் பசுபதி (57). இவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com