வீரபாண்டி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் தயாரித்து வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
வீரபாண்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜவேல் (51). வயல்பட்டி பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக 5 லிட்டா் ஊறல் தயாரித்து வைத்திருப்பதாக அங்கு சென்ற வீரபாண்டி போலீஸாா், ஆதிபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரேசன்(39), வள்ளிநகரைச் சோ்ந்த ராஜசேகரன்(33) மற்றும் ராஜவேல் ஆகியோரை கைது செய்தனா்.