காதல் திருமணம் செய்த சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

தேனி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 17 வயதுடைய சிறுமி திங்கள்கிழமை இரவு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 17 வயதுடைய சிறுமி திங்கள்கிழமை இரவு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் ஆசைதம்பி மகள் நீனா (17). இவரும், சின்னம்மாள்புரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரும் காதலித்து, கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

18 வயது பூா்த்தியடையாத தனது மகளை திருமணம் செய்து கொண்டதாக ஆசைத்தம்பி அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமாா் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நீனாவுக்கும், ராஜ்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த நீனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து ஆசைத்தம்பி அளித்த புகாரின் மீது பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com