கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

போடியில் செவ்வாய்க்கிழமை, மராமத்து பணியின்போது 200 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

போடியில் செவ்வாய்க்கிழமை, மராமத்து பணியின்போது 200 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

தேனி மாவட்டம் போடி பெருமாள்கவுண்டன்பட்டியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவா் ராசிங்காபுரத்தில் தனியாா் கிணறு ஒன்றில் மராமத்து பணிக்காக இறங்கியுள்ளாா். அப்போது 200 அடி கிணற்றில் தவறி விழுந்தாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். போடி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி பாலகிருஷ்ணனை மீட்டனா். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com