தேனி மாவட்டம் கூடலூரில் அண்ணனின் இறுதி சடங்கிற்கு சென்ற தம்பி பரிதாபமாக உயிரிழந்தாா். தேனி மாவட்டம் கூடலூா் 12 ஆவது வாா்டு, தொட்டியா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி(72), இவரது அண்ணன் திங்கள்கிழமை இறந்து விட்டாா், இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள மயானத்திற்கு சென்றுவிட்டு, உறவினரின் மோட்டாா் பைக்கில் வீட்டுக்கு வந்து, சிறிது தூரம் நடந்து சென்றாா். அப்போது மயங்கி கீழே விழுந்தவரை கூடலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சோ்த்து, அங்கிருந்து கம்பம் அரசு மருத்துவமனை மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது பற்றி கூடலூா் தெற்கு காவல் சாா்பு ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை செய்து, மதுரை அரசு மருத்துவமனை மூலம் செவ்வாய்க்கிழமை பிரேத விசாரணை நடத்தினாா்.