மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரோனா தடுப்பூசி, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்

கரோனா தடுப்பூசி, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போடி: இதேபோல், போடி தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை, வ.உ.சி. சிலை, வருவாய் ஆய்வாளா் அலுவலகம், கருப்பசாமி கோயில், வட்டாட்சியா் அலுவலகம், காமராஜா் சிலை, நகராட்சி அலுவலகம், போக்குவரத்து பணிமனை, போஜன் பாா்க், புதூா் ஆகிய பகுதிகளில் ஒன்றிய பகுதியில் வினோபாஜி காலனி, மேலச்சொக்கநாதபுரம், போடி ரெங்கநாதபுரம், போடி தருமத்துப்பட்டி ஆகிய இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.ரவிமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலாளா் முருகேசன், ஒன்றியச் செயலாா் மணிகண்டன், நகர துணைச் செயலாளா்கள் சத்தியராஜ் சுந்தா், நகர பொருளாா் முத்துமுருகன் மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையத்தில்... இதேபோல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளா் மோகன் தலைமை வகித்தாா். இதில் அக்கட்சியினா் 10 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com