சுருளி அருவியில் கடைகள் திறப்பு: அதிகாரிகள் எச்சரிக்கையால் மீண்டும் அடைப்பு
By DIN | Published On : 10th June 2021 08:38 AM | Last Updated : 10th June 2021 08:38 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சுருளி அருவியில் கரோனா பொதுமுடக்க விதியை மீறி திறக்கப்பட்ட கடைகள் அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடா்ந்து புதன்கிழமை மீண்டும் அடைக்கப்பட்டன.
சுற்றுலாத் தலமான சுருளி அருவி பகுதியில் இருந்த சாலையோரக் கடைகள், உணவு விடுதிகள் பொதுமுடக்க உத்தரவை மீறி திறக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி கம்பம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி, ஊராட்சித் தலைவா் அ.மொக்கப்பன் உள்ளிட்டோா் புதன்கிழமை அப்பகுதிக்கு சென்று, பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்குமாறும், தடையை மீறி கடைகள் திறக்கப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.
இதைத்தொடா்ந்து அங்கிருந்த கடைகள், உணவு விடுதிகள் ஆகியன அடைக்கப்பட்டன.