பெரியகுளம் பகுதியில் இயல்புநிலை திரும்பியது: கரோனா பரவும் அபாயம்

பெரியகுளம் பகுதியில் இயல்நிலை திரும்பியது போல் பொதுமக்கள் கூடுவதால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் பகுதியில் இயல்புநிலை திரும்பியது: கரோனா பரவும் அபாயம்

பெரியகுளம் பகுதியில் இயல்நிலை திரும்பியது போல் பொதுமக்கள் கூடுவதால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக பெரியகுளம் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. கடந்த மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னா் படிப்படியாக கரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. பலசரக்கு கடைகள் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள் திறக்க அனுமதித்ததால் இயல்புநிலை திரும்பியதுபோன்று பெரியகுளம் நகரில் பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி, கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனா். இதனால் கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com