வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

தேனியில் புதன்கிழமை இரவு, மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

தேனியில் புதன்கிழமை இரவு, மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம், வெங்கலா நகரைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி மல்லிகா (50). இவா், வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த போது மாடியிலிருந்து தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த மல்லிகா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பயனின்றி அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பால்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில், தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com