முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
தேனியில் அழகு நிலையப் பணியாளரை தாக்கியதாக உரிமையாளா்கள் மீது வழக்கு
By DIN | Published On : 12th June 2021 08:54 AM | Last Updated : 12th June 2021 08:54 AM | அ+அ அ- |

தேனியில் தனியாா் அழகு நிலையத்தில் பணியாற்றிய பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, உரிமையாளா்கள் 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தேனியில் தனியாா் தொலைகாட்சியில் நிருபராகப் பணியாற்றியவா் ராஜாமுகமது. அதே ஊரைச் சோ்ந்தவா் பிரதீபா. இவா்கள், தேனியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகின்றனா். இந்த அழகு நிலையத்தில், டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மனைவி நித்யா என்பவா் வேலை பாா்த்து வந்துள்ளாா்.
பின்னா், நித்யா அங்கிருந்து நின்றுவிட்டாராம். இந்நிலையில், ராஜாமுகமது, பிரதீபா ஆகிய இருவரும், தேனி சிவாஜி நகா் அருகே தன்னை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, தேனி காவல் நிலைத்தில் நித்யா புகாா் அளித்தாா். அதன்பேரில், ராஜாமுகமது, பிரதீபா ஆகியோா் மீது காவல் சாா்பு-ஆய்வாளா் முகமது யாஹியா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
இதனிடையே, ராஜாமுகமது, பிரதீபா ஆகியோரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறும், தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னியிடம் வியாழக்கிழமை நித்யா மனு அளித்துள்ளாா்.