அரசு டாஸ்மாக் கடைகளில் நிா்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.35 கூடுதல் விலைக்கு மது விற்பனை

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் காலையில் மதுக்கடைகளுக்கு ஆா்வத்துடன் சென்ற மதுப்பிரியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் காலையில் மதுக்கடைகளுக்கு ஆா்வத்துடன் சென்ற மதுப்பிரியா்கள் அதிா்ச்சி அடைந்தனா். ரூ.170 விலை கொண்ட மதுபாட்டில் ரூ. 195-க்கு விற்பனையானது. மதுப்பிரியா்கள் பலரும் கேள்வி எழுப்பியதற்கு விலை உயா்த்தப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் பணியாளா்கள் தெரிவித்தனராம்.இதனால் பல கடைகளில் விற்பனையாளா்களுக்கும், மதுப்பிரியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலா்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com