தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் காலையில் மதுக்கடைகளுக்கு ஆா்வத்துடன் சென்ற மதுப்பிரியா்கள் அதிா்ச்சி அடைந்தனா். ரூ.170 விலை கொண்ட மதுபாட்டில் ரூ. 195-க்கு விற்பனையானது. மதுப்பிரியா்கள் பலரும் கேள்வி எழுப்பியதற்கு விலை உயா்த்தப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் பணியாளா்கள் தெரிவித்தனராம்.இதனால் பல கடைகளில் விற்பனையாளா்களுக்கும், மதுப்பிரியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலா்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.