உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியராக ப.கெளசல்யா (28) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
உத்தமபாளையம்  வருவாய்  கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியராக ப.கெளசல்யா (28) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் என இரு வருவாய் கோட்டங்கள் உள்ளன. அதில், உத்தமபாளையம், போடிநாயக்கனூா் ஆகிய இரு வட்டாரங்களுக்கு உத்தமபாளையம் தலைமையிடமாக செயல்படுகிறது. உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியராக பணியிலிருந்த ந.சக்திவேல் திருப்பூா் மாவட்ட தாட்கோ மேலாளராகப் பணி மாறுதலாகிச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று திருப்பூரைச் சோ்ந்த ப.கெளசல்யா, கோவையில் பயிற்சி வருவாய் கோட்டாட்சியராக பணியில் இருந்தாா். தற்போது, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியராக பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அவா் தனது பணியை தொடங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com