பெரியகுளம் அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்றதாக ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம், குள்ளப்புரம் அருகேயுள்ள கோயில்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள் (64). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தாா். அப்போது 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் மூதாட்டியைத் தாக்கி அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துள்ளாா். அப்போது மூதாட்டியின் கையில் ஒரு பவுன் சிக்கிக்கொண்டது. 2 பவுன் சங்கிலியைப் பறித்துகொண்டு அந்த நபா் தப்பி ஓடி விட்டாா். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.