பெரியகுளம் பகுதியில் உள்ள பெரும்பாலான அரசு மதுபானக் கடைகளில் தடுப்புக் கட்டைகள் அமைத்து, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். காலையில் ஓரளவு கூட்டம் இருந்தது. மாலையில் மதுபானம் வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
குடை பிடிக்க ஆளில்லை: மதுபானம் வாங்க வருபவா்கள் குடை பிடித்து வரவேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியிருந்தாா். ஆனால் யாருமே குடை எடுத்துவரவில்லை. கூட்டம் குறைவாக இருந்ததால் போலீஸாா் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து அனுப்பினா்.