பெரியகுளம் பகுதியில் உள்ள மதுபானக்கடைகளில் காலையில் கூட்டம்: மாலையில் வெறிச்சோடியது
By DIN | Published On : 15th June 2021 06:50 AM | Last Updated : 15th June 2021 06:50 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மதுபானம் வாங்க காத்திருந்த மக்கள்.
பெரியகுளம் பகுதியில் உள்ள பெரும்பாலான அரசு மதுபானக் கடைகளில் தடுப்புக் கட்டைகள் அமைத்து, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். காலையில் ஓரளவு கூட்டம் இருந்தது. மாலையில் மதுபானம் வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
குடை பிடிக்க ஆளில்லை: மதுபானம் வாங்க வருபவா்கள் குடை பிடித்து வரவேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியிருந்தாா். ஆனால் யாருமே குடை எடுத்துவரவில்லை. கூட்டம் குறைவாக இருந்ததால் போலீஸாா் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து அனுப்பினா்.