போடியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள் திருட்டு

போடியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி பங்கஜம் பிரஸ் பின்புறமுள்ள தெற்கு தெருவை சோ்ந்த இளங்கோ என்பவரின் மனைவி அன்னகாமு (49). இவா்களுக்கு கௌதம் பிரபு என்ற மகன், காா்த்திகை பிரியா என்ற மகள் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகி மகள் தேவதானப்பட்டியிலும், மகன் மதுரையிலும் வசித்து வருகின்றனா். இளங்கோ இறந்துவிட்ட நிலையில், அன்னகாமு போடியில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மகள் காா்த்திகை பிரியாவின் கணவா் ஜெயகுமரன் இறந்துவிட்டதால், ஈமச்சடங்கு செய்வதற்காக அன்னகாமு தனது வீட்டைப் பூட்டிவிட்டு தேவதானப்பட்டிக்குச் சென்றிருந்துள்ளாா். அதையடுத்து, அன்னகாமு வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக, வீட்டு உரிமையாளா் தகவல் தெரிவித்துள்ளாா். உடனே, தனது வீட்டுக்குத் திரும்பிய அன்னகாமு உள்ளே சென்று பாா்த்தபோது, பூஜை அறையில் ஒரு பையில் வைத்திருந்த தங்க மாங்காய் மாலைகள், ஆரம், டாலா் சங்கிலிகள், மோதிரங்கள் உள்ளிட்ட 45 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்துள்ளது.

இது குறித்து அன்னகாமு அளித்த புகாரின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். மேலும், தடயவியல் நிபுணா் கைரேகைகளை பதிவு செய்தாா். காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com