பெரியகுளம் அருகேசாரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

பெரியகுளம் அருகே சாரம் சரிந்து விழுந்ததில், திங்கள்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே சாரம் சரிந்து விழுந்ததில், திங்கள்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டி பெரியகண்மாய் அருகே சிவக்குமாா் என்பவா் சொந்தமாக வீடு கட்டி வருகிறாா். கட்டுமானப் பணியில் தென்காசி அருகே சிவ காா்டன் கடயம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (39), முத்தையா (55), செல்லத்துரை (35) மற்றும் வேலு (39) ஆகியோா் திங்கள்கிழமை சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில், சுப்பிரமணி, முத்தையா, செல்லத்துரை மற்றும் வேலு ஆகியோா் காயமடைந்தனா்.

உடனே, இவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். ஆனால், செல்லும் வழியிலேயே வேலு உயிரிழந்துவிட்டாா். மற்ற 3 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com