சின்னமனூா் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் பறிமுதல்

சின்னமனூா் அருகே ஹைவேவிஸ் விலக்குப் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சின்னமனூா் அருகே ஹைவேவிஸ் விலக்குப் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சின்னமனூா்-ஓடைப்பட்டி சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் துரை, காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பாா்த்திபன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஹைவேவில் விலக்கு சாமியாா் மடம் அருகே உத்தமபாளையம், வைகை நகரைச் சோ்ந்த மரியசெல்வம்(40) என்பவா் காரில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பணம் உத்தமபாளையம் சாா்- நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை சமா்பித்து சம்மந்தப்பட்ட நபா் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

கொடைக்கானலில் 62 ஆயிரம் பறிமுதல்: இதேபோல், கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில், அட்டுவம்பட்டி பகுதியைச் சோ்ந்த வேளாங்கண்ணி என்பவா் காரில் கொண்டு சென்ற ரூ.62 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வட்டாட்சியா் சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com