தேனி மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு விழா

ராயப்பன் பட்டி பகுதிகளில் கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபைகளின் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.
கம்பம் ராயப்பன் பட்டி பகுதிகளில் நடைபெற்ற குருத்தோலை.
கம்பம் ராயப்பன் பட்டி பகுதிகளில் நடைபெற்ற குருத்தோலை.

தேனி மாவட்டம் கம்பம், ராயப்பன்பட்டி பகுதிகளில் கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபைகளின் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு அகியவற்றை நினைபடுத்தும் புனித வாரத் திருவழிபாடுகளின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு தினம் அமைகிறது.

இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரிலிருந்து எருசலேம் நகரில் வெற்றியின் அரசராகப் பவனி வந்த நிகழ்வை, நினைவு கூறுவது குருத்தோலை ஞாயிறாகும். 

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நடைபெறும் ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. 

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பங்கு மக்கள், கம்பம் சிஎஸ்ஐ பேராலய பங்கு மக்கள் இணைந்து குருத்தோலை ஞாயிறு கொண்டாடினர். 

பங்குத்தந்தையர்களால் புனித நீரில் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கையிலேந்திய பீடப்பணியாளர்கள், ஆண்கள், பெண்கள் கம்பம் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியிலிருந்து மெயின்ரோடு சிக்னல், ஓடைக்கரைத்தெரு வழியாக சிஎஸ்ஐ ஆலயத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.

 அங்கு தேவாலய போதகர் அருண்குமர்  திருப்பலி நிறைவேற்றினார். 

பின்னர் மெயின்ரோடு வழியாக ஊர்வலம் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை வந்தடைந்தது.

அங்கு கம்பம் பங்குத்தந்தை இளங்கோ அற்புதராஜ், மதுரை திருநகர் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. 

இதில் கம்பம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 
ராயப்பன்பட்டிறில் புனித பனிமய மாதா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை ஜோசப் சிறப்பு திருப்பலி நடத்தினார், முக்கிய வீதிகள் வழியாக பங்கு மக்கள் ஊர்வலம் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com