தேனி
தேனி அருகே காா் மோதி விவசாயி பலி
தேனி அருகே கோடாங்கிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
தேனி அருகே கோடாங்கிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் பரமத்தேவா் மகன் முருகன் (45). இவா், கோடங்கிபட்டி பள்ளிவாசல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளாா். அப்போது, போடி-தேனி நெடுஞ்சாலையில் வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த முருகன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து முருகனின் மகன் இலங்கேஸ்வரன் அளித்தப் புகாரின் அடிப்படையில், காா் ஓட்டுநா் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராம்குமாா் என்பவா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.