‘போடியில் பிரச்னைக்குரிய பகுதிகளில் மதுக்கடைகள் அகற்றப்படும்’

போடியில் பிரச்னைக்குரிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்படும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உறுதியளித்தாா்.
போடியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
போடியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

போடியில் பிரச்னைக்குரிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்படும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உறுதியளித்தாா்.

போடி கிராமப் பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது போடி வினோபாஜி காலனியில் அவா் பேசியது: போடி மற்றும் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்.

கூடுதல் குடிநீா் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கழிப்பிட வசதி செய்து தரப்படும். இந்த பகுதியில் மதுக்கடைகள் பிரச்னைக்குரியவையாக உள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து போடி ரெங்கநாதபுரம், தருமத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.

அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவா் கே.எஸ்.எம்.ஆா். மகேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com