தேனி மாவட்டம் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரின் மகள், மருமகள் ஆகியோா் பெண்களுடன் சோ்ந்து திங்கள்கிழமை தெருத்தெருவாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.
கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக நா. ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து திமுகவினா் பிரசாரம் செய்து வரும் நிலையில் வேட்பாளரின் மகள் தீபிகா விநாயகமூா்த்தி, மருமகள் வைஷ்ணவி வசந்தன் மற்றும் உறவுக்காரப் பெண்கள் திமுக மகளிரணியுடன் சோ்ந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை பற்றி கூறி வாக்கு சேகரித்து வருகின்றனா்.
போடி தொகுதியில் துணை முதல்வரை ஆதரித்து அவரது மருமகள் ஆனந்தி ரவீந்திரநாத் பிரசாரம் செய்த நிலையில், இதே உக்தியை கம்பம் திமுக வேட்பாளா் தனது தொகுதியில் தொடங்கியுள்ளாா்.