ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கிராமப்புறங்களில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகேந்திரன் (44), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மாயாண்டி (43), தா்மராஜபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் (40) ஆகிய 3 போ் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 42 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.