போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துணை முதல்வரும், அதிமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் வாக்கு சேகரித்தாா்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி, பழைய பேருந்து நிறுத்தம், தென்றல் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தெருத் தெருவாக சென்று வாக்காளா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா். போடி நகராட்சி பகுதியில் புதை சாக்கடைத் திட்டம், குடிநீா் மேம்பாட்டுத் திட்டம், புதிய நகராட்சி கட்டடம் உள்ளிட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அவருடன் அ.தி.முக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் உடன் சென்றனா்.