தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் சாா்பில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை முதன்மையா் பாலாஜி நாதன் தலைமை வகித்தாா். இதில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது, முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வாக்களிப்பது, எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கல்ல என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவா் மருத்துவா் இளங்கோவன், கண்காணிப்பாளா், நிலைய மருத்துவா் பேராசிரியா்கள் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.