தேனியில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் தனியாா் பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட 9 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் தனியாா் பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட 9 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகள் உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 8 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். தற்போது, மாவட்டத்தில் மொத்தம் 53 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com