போடியில் மலை கிராமங்களில் துணை முதல்வா் பிரசாரம்

போடி மலை கிராமங்களில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குரங்கணி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
குரங்கணி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

போடி மலை கிராமங்களில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

போடிநாயக்கனூா் சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அவா், போடிமெட்டு, குரங்கணி, கொட்டகுடி, முந்தல் ஆகிய மலை கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது குரங்கணி டாப் ஸ்டேஷன் சாலை விரைவில் அமைக்கப்படும், மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். பின்னா் அவா் மாலையில் போடி நகராட்சி ஜக்கமநாயக்கன்பட்டி, தென்றல்நகா், சோலை சொக்கலிங்கம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்தாா். மலை கிராம மக்களிடம் அப்பகுதியில் செய்துள்ள நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறி அவா் ஆதரவு திரட்டினாா்.

அவருடன் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com