கரோனா பரவலை தடுக்கும் வகையில் போடியில், முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா 2 ஆம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒலிபெருக்கி தெரிவிக்கப்பட்டது.
அப்போது, வா்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளா்களை முகக் கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்றும், தவறினால் தனி நபா்களுக்கும், வா்த்தக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.