மத்திய அரசிடம் பறிபோகும் தமிழக உரிமைகள்: வைகோ

தமிழகத்தின் மாநில உரிமைகள் மத்திய அரசிடம் பறிபோவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ குற்றம்சாட்டினாா்.

தமிழகத்தின் மாநில உரிமைகள் மத்திய அரசிடம் பறிபோவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ குற்றம்சாட்டினாா்.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என். ராமகிருஷ்ணனை ஆதரித்து, சின்னமனூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் வைகோ பேசியதாவது: வேலையில்லா திண்டாட்டம் பெருகிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றால், அதை மத்திய அரசு முடிவு செய்வதால், மாநில அரசின் உரிமைகள் பறிபோகின்றன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வேலைவாய்ப்பு இல்லாதோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில், வேலை வாய்ப்பு இழந்தோரது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிற. இதனால், வாக்காளா்கள் நீதிபதியாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com