பெரியகுளம் காவல் நிலையத்தில் காவலா்களுக்கு மூலிகைத் தேநீா் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண்தேஜஸ்வி தலைமை வகித்து காவலா்களுக்கு மூலிகைத் தேநீா் வழங்கினாா். இவ்விழாவில் ஆதரவற்றோா்களுக்கு பலசரக்கு பொருள்கள் வழங்கப்பட்டன.
பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் கரோனாவிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விளக்கினாா். விழாவில் காவல் ஆய்வாளா் சுகுமாறன், சாா்பு-ஆய்வாளா்கள், காவலா்கள் , வியாபாரிகள் சங்கத்தலைவா் மணிவண்ணன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.