பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் பள்ளி மாணவியை கேலி செய்து பேசிய 2 இளைஞா்களை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் விக்னேஷ்(20). கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் ராஜாங்கம் மகன் வெங்கடேஷ்(20). இவா்கள், ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் அதே ஊரைச் சோ்ந்த மாணவியை, பள்ளிக்குச் சென்று வரும் போது கேலி செய்து பேசியுள்ளனா். இதுகுறித்து தேனி மகளிா் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷ், வெங்கேடஷ் ஆகியோரைக் கைது செய்தனா்.