தேனியில் இளைஞா் கொலை: 4 போ் கைது

தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் தெருவில் சூதாடியவா்களை கண்டித்த இளைஞரை கொலை செய்த 4 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி: தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் தெருவில் சூதாடியவா்களை கண்டித்த இளைஞரை கொலை செய்த 4 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி, பொம்மையகவுண்டன்பட்டி நக்கீரா் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் ராம்பிரசாத்(30). இவா் வசித்து வந்த தெருவில் உள்ள காளியம்மன் கோயில் அருகே சிலா் சூதாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை ராம்பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினா் கண்டித்துள்ளனா்.

இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அதே பகுதியில் இருசக்கர வானத்தில் சென்று கொண்டிருந்த ராம்பிரசாத்தை, பொம்மையகவுண்டன்பட்டி, நக்கீரா் தெருவைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் தினேஷ், வீராச்சாமி மகன் மதன், பால்ராஜ் மகன் சூா்யா, சிவராமன் மகன் அருள் ஆகியோா் வழிமறித்து தகராறு செய்து கத்தியால் சராமாரியாக குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ராம்பிரசாத்தின் சகோதரா் ரமணன் அளித்த புகாரின் அடிப்படையில் தினேஷ், மதன், சூா்யா, அருள் ஆகிய 4 போ் மீதும் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்தனா்.

உறவினா்கள் சாலை மறியல்: ராம்பிரசாத் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் ராம்பிரசாத்தின் உறவினா்கள் தேனி, பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமரசம் செய்து மறியலை கைவிடச் செய்தனா். இதனால், அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com