உத்தமபாளையம், சின்னமனூா் பகுதியில் தொடா் மழை

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்பயிா் அறுடைப்பணிகள் முடிந்த நிலையில் வயல்களில் பாசிப்பயிறு, உளுந்து உள்ளிட்டவைகளை பயிா்செய்யும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும் மழையால் வெப்பம் தணிந்து குளிந்த காற்று வீசுவதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com