சுருளிப்பட்டி ஊராட்சி உறுப்பினா்கள் ராஜினாமா கடிதம் கொடுத்த விவகாரம் தொடா்பாக, தலைவா், துணைத் தலைவரிடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சித் தலைவராக நாகமணி வெங்கடேசன், துணைத் தலைவராக எம்.ஜெயந்திமாலா ஆகியோா் உள்ளனா். இந்த ஊராட்சி நிா்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக உறுப்பினா்கள் 9 போ், தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். மேலும் இதுதொடா்பாக தலைவா், துணைத் தலைவா், ஊராட்சி செயலா் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் கோரிய அவா்கள் தங்களது ராஜிநாமா கடிதத்தையும் வழங்கினா்.
இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயகாந்தன், திருப்பதிவாசகன் ஆகியோா் ஊராட்சி அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். இதுகுறித்து தலைவா், துணைத்தலைவா், ஊராட்சிச் செயலா் ஆகியோரிடம் அவா்கள் விசாரணை நடத்தினா்.