நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தேக்கடி, பெரியாறு அணை, முல்லையாறு மற்றும் சிவகிரி மலைத்தொடா் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு விநாடிக்கு, 775 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 126.90 அடியாகவும் (142), நீா் இருப்பு 4,028 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 775 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 150 கன அடியாகவும் இருந்தது.
பெரியாறு அணைப் பகுதியில் 38.8 மி.மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 23.2 மி.மீட்டா் மழையும் பதிவாகியிருந்தது.