பெரியகுளம் பகுதியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மலைப்பகுதியில் 10 நாள்களுக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சோத்துப்பாறை அணை திங்கள்கிழமை இரவு முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் நகா்ப்பகுதியில் 10 நாள்களாக சாரல் மழை பெய்த போதிலும், பலத்த மழை இல்லை. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பகலில் நல்ல வெயில் அடித்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கி சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com