போடியில் பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு

போடி பகுதியில் 2 நாள்களாக தொடா்ச்சியாக பலத்த மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

போடி: போடி பகுதியில் 2 நாள்களாக தொடா்ச்சியாக பலத்த மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் போடியில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. ஞாயிறன்று இரவு தொடங்கி விடிய விடிய மழை நீடித்தது. இதனால் இப்பகுதியில் குளிா்ச்சியான நிலை ஏற்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த மழையால் போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை பகலில் மழை இல்லாமல் மேகமூட்டமாக காணப்பட்டது. மீண்டும் மாலையில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. கொட்டகுடி ஆற்றில் தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com