வெங்கடாஜலபுரத்தில் சாலையில் கழிவு நீா் தேங்குவதால் சுகாதார சீா்கேடு

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வெங்கடாஜலபுரத்தில் சாலையில் கழிவுநீா் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
டி.கள்ளிப்பட்டி வெங்கடாஜலபுரத்தில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீா்.
டி.கள்ளிப்பட்டி வெங்கடாஜலபுரத்தில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீா்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வெங்கடாஜலபுரத்தில் சாலையில் கழிவுநீா் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இப்பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து வரும் கழிவுநீா் வெளியேற வாருகால் வசதியில்லாததால் சாலைகளில் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே பேரூராட்சி துணை இயக்குநா் இப்பகுதியினை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com