தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீஸாா் செவ்வாய் கிழமை கைது செய்தனா்.
மாா்க்கையன்கோட்டைை சோ்ந்த முருகன் மகன் இமானுவேல்(25).இவா் அதே பகுதியை சோ்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி அழைத்து சென்றுவிட்டாா். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தென்காசி பகுதியில் இருந்த இமானுவேல் மற்று சிறுமியை போலீஸாா் மீட்டனா். அதில் சிறுமியை மானபங்கம் செய்த குற்றத்திற்காக , சின்னமனூா் காவல் ஆய்வாளா் லாவண்யா , வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தமபாளைளயம் கிளைச்சிறையில் அடைத்தனா்.